தமிழ்நாடு

முதியவருடன் மது அருந்துவதில் நட்பு.. சரக்கு தராததால் மண்டைக்கு ஏறிய வெறி - கழுத்தை அறுத்து கொடூரம்

தந்தி டிவி

காஞ்சிபுரத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவரை, தனக்கு தராமல் மது அருந்தியதால் 17 வயது சிறுவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், செங்கழுநீர் ஓடை பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் 60 வயது முதியவர். இவருடன் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் நட்பு கொண்டு பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்துள்ளனர். சம்பவத்தன்றும் இருவரும் ஒன்றாக மது அருந்த சென்ற நிலையில், சிறுவனுக்கு பங்கு தராமல் முழு மதுபானத்தையும் முதியவரே அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் முதியவரை பிளேடால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை