தமிழ்நாடு

"என்னையே நீ கீழ தள்ளி விட்டுட்டியா?"... ஆத்திரத்தில் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த போதை ஆசாமி

தந்தி டிவி

கடலூரில் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் மதுபோதையில் இருந்த நபர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது பெட்ரோல் டேங்கில் இருந்து பெட்ரோல் லீக் ஆனதால், ஆத்திரத்தில் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், இருசக்கர வாகனம் கொளுந்து விட்டு எரிந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரித்தபோது, நெய்வேலி போராட்டம் வெளியில் தெரியவே பைக்கை கொளுத்தியதாக மதுபோதையில் தெரிவித்துள்ளார். இதனால் இப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்