நத்தம் அருகே பண மோசடி சம்பவத்தில் பணத்தை இழந்த பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியில் FQL ஆன்லைன் மோசடி சம்பவத்தில் தொடர்புடைய ரமேஷ், அவரது மனைவி அனிதா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் உள்ளிட்ட மூவரும் கடந்த மாதம் 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆன்லைன் பண மோசடியில் பணத்தை இழந்த வாலிபர் ராசு என்ற மாயழகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவர் உடலை வைத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் இறந்தவர் உடலை கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற் கூறாய்விற்கு பின் காசம்பட்டியில் உடல் தகனம் செய்யப்பட்டது.
நேற்று கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்ட 5 நபர்கள் பண மோசடி சம்பவத்தில் முகவர்களாக செயல்பட்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
#scam #woman #suicide #thanthitv