தமிழ்நாடு

ஆவணம் இல்லாமல் பழைய செல்போன்கள் வாங்க வேண்டாம் - மயிலாப்பூர் துணை ஆணையர்

பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை மயிலாப்பூர் துணை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 மாதம் முன்பு வரை காணாமல் போன, செல்போன்களை, அவற்றின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து மொபைல் நெட்வொர்க் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, செல்போன்களை துணை ஆணையர் மயில்வாகனன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருடிய செல்போன்களை கைமாற்றி குறைந்த விலைக்கு சிலர் விற்று வருவதால், பழைய செல்போன்கள் வாங்கும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கக் கூடாது என பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்