தமிழ்நாடு

விஷம் வைத்து 7 நாய்க்குட்டிகள் கொலை - மதுரையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

இடையூறாக இருந்ததாக கூறி மதுரையில் 7 நாய்க்குட்டிகள் விஷம் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் உயிரிழந்து கிடந்தன. அதே பகுதியில் துறுதுறுப்பாக சுற்றி வந்த நாய்கள் சிலருக்கு இடையூறாக இருந்ததாக நினைத்து விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பசு மாட்டின் மீதும் ஆசிட் வீசி ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி