தமிழ்நாடு

விஷம் வைத்து 7 நாய்க்குட்டிகள் கொலை - மதுரையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

இடையூறாக இருந்ததாக கூறி மதுரையில் 7 நாய்க்குட்டிகள் விஷம் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் உயிரிழந்து கிடந்தன. அதே பகுதியில் துறுதுறுப்பாக சுற்றி வந்த நாய்கள் சிலருக்கு இடையூறாக இருந்ததாக நினைத்து விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பசு மாட்டின் மீதும் ஆசிட் வீசி ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்