தமிழ்நாடு

விஷம் வைத்து 7 நாய்க்குட்டிகள் கொலை - மதுரையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

இடையூறாக இருந்ததாக கூறி மதுரையில் 7 நாய்க்குட்டிகள் விஷம் வைத்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பிறந்து சில நாட்களே ஆன ஏழு நாய்க்குட்டிகள் உயிரிழந்து கிடந்தன. அதே பகுதியில் துறுதுறுப்பாக சுற்றி வந்த நாய்கள் சிலருக்கு இடையூறாக இருந்ததாக நினைத்து விஷம் வைத்து கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 21 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. பசு மாட்டின் மீதும் ஆசிட் வீசி ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் விலங்குகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை