தமிழ்நாடு

கோவை : மர்மமான முறையில் 13 நாய்கள் இறப்பு

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் இன்று காலை ஆங்காங்கே 13 நாய்கள் இறந்த கிடந்துள்ளன.

தந்தி டிவி

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் இன்று காலை ஆங்காங்கே 13 நாய்கள் இறந்த கிடந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விஷம் கலந்த கோழி கழிவுகளை தின்றதால் இந்த நாய்கள் இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக நாய்களின் சடலங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"