காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் 4 மாத நாய்க்குட்டியை பாதுகாவலர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நாய்க்குட்டியை அங்கு பணிபுரியும் பாதுகாவலர் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வீடியோ எடுத்த மாணவரையும் கல்லூரி பாதுகாவலர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கல்லூரி வாசலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.