தமிழ்நாடு

அரிய வகை "பாம்பே O" ரத்தம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை : ஸ்டான்லி மருத்துவமனையில் சாதனை

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் "பாம்பே O" என்ற அரிய ரத்த வகையைச் சேர்ந்த ஒருவருக்கு ரத்த தானம் பெற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தை சேர்ந்த மெகர் ஜான் என்ற பெண்ணுக்கு அரிய வகை ரத்தமான "பாம்பே O" இருப்பது தெரிய வந்தது. இந்த வகை ரத்தம் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு மட்டுமே இருக்கக் கூடியது. இந்நிலையில், மெகர் ஜானுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக "பாம்பே O"ரத்த வகை குறித்து பல்வேறு வழிகளில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை விளம்பரம் செய்தது. இதையடுத்து, ஸ்ரீவத்ஸன் என்பவரது ரத்த வங்கியில் இருந்து 4 பேர் அவருக்கு ரத்ததானம் அளித்தனர். அதன் பிறகு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்