கொரோனா பேரிடரிலும், தன்னுயிருக்கு அஞ்சாமல், கனிவோடு, கடமையாற்றும் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர் தின வாழ்த்து கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கவிதை வெளியிட்டுள்ள அவர், கண்கள் உறங்குவதும், இதயம் உறங்காமல் இருப்பதும் மருத்துவக் கடவுள்களின் மகத்துவ பணியால் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.