குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, திமுக எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்ததாக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக, கனிமொழி எம்.பி குற்றம்சாட்டி உள்ளார்.இதுதொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் முடியும் வரை திமுக உறுப்பினர்கள் இருந்ததாகவும், வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.