கோவை தொண்டாமுத்தூர் அருகே போலி ஆவணம், போலி முத்திரைகள் தயாரித்து வீட்டுமனைகள் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக திமுக ஒன்றிய செயலாளர் சேனாதிபதி மீது, பெரியநாயக்கன் பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.