தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர் கைது

திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தொழில் செய்து வந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்மோகன்குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திமுக பிரமுகர் என்பதும், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரான பாரதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜ்மோகன்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்