தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர் கைது

திருப்பூரில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் தொழில் செய்து வந்த திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜ்மோகன்குமாரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திமுக பிரமுகர் என்பதும், திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உதவியாளரான பாரதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ராஜ்மோகன்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி