தமிழ்நாடு

"தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்க கூடாது" - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்பட 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத அடிப்படையில் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், தேசியக் குடிமக்கள் பதிவேடுக்கு வழிகோலும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு தயாரிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ