தமிழ்நாடு

தி.மு.க. வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிகளை பின்பற்றியே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆளும் கட்சியினர் தங்கள் அதிகாரங்களை பயன்படுத்துவதாக, தி.மு.க. மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த மனுவை, நேற்றிரவு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விதிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று, எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை இன்று தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை