தமிழ்நாடு

தேசிய மக்கள் தொகை பதிவேடு : "ரூ.4000 கோடி செலவிட வேண்டிய அவசியம் என்ன?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தேசிய மக்கள் தொகை பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குடியுரிமை சட்டத் திருத்தம் 2019-ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வுக்கான சூழலை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளதாக கூறியுள்ளார். தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக நான்காயிரம் கோடி ரூபாயை, செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"