* அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே பீதியில் முடங்கிக் கிடக்கும் நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி "நீட்" தேர்வு நடைபெறும் என்று நடைபெறும் என்று அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
* இது,மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதை காட்டுவதாக கூறியுள்ளார்.
* பல மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில்,நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை என தெரிவித்துள்ளார்.
* இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடைபெறவில்லை என்பதற்கு ஆள்மாறாட்ட வழக்குகள் உதாரணம் என்று கூறியுள்ள ஸ்டாலின்,
* முறையற்ற ஒரு தேர்வை, கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
* மாநில அரசும், இத்தேர்வைக் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.