தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு : கனிமொழி தலைமையில் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

போராட்டத்தில் பேசிய கனிமொழி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றார். மேலும், இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் தைரியத்தை பாராட்டுவதாக கூறிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியாகும் அளவிற்கு காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைத்தார்.

இதனிடையே, தடையை மீறி போராட்டம் நடத்திய கனிமொழியை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்