தமிழ்நாடு

"திமுக உறுப்பினர் அன்பழகன் கூட்டத் தொடரில் இருந்து நீக்கம்" - சபாநாயகர் தனபால் அறிவிப்பு

அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனை வரும் 9-ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ஆளுநர் உரை மீதான பொது விவாதத்தில் பேசி முடித்த திமுக உறுப்பினர் அன்பழகன், ஆளுநர் உரையை கிழித்து, சபாநாயகர் முன்பாக வீசினார். இதையடுத்து அவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதுமாக நீக்கி வைத்து, சபாநாயகர் தனபால் அறிவித்தார். இந்த நிலையில்

பட்ஜெட் தாக்கல் மற்றும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், அன்பழகனுக்கு பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், 9- ஆம் தேதி வரை மட்டும் நீக்கம் செய்தால் போதுமானது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து வரும் 9-ம் தேதி வரை நடைபெறும் கூட்டதொடரில் பங்கேற்பதில் இருந்து, அன்பழகனை நீக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை