தே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பணியை தொடங்கி வைத்து, தொண்டர்கள் செய்யும் பணியை பார்வையிட்டார். பின்னர் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மழை காரணமாக சென்னை மாநகரில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். அவற்றை உடனடியாக ஆய்வு செய்து தார் சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.