டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் டெல்லிக்கு 400 கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம் நடக்கும் பட்சத்தில், உற்பத்தி அதிகரிப்பதோடு தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.