சென்னை தாஷமக்கான் சாலையில் கனமழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால், சுமார் 80 வருடங்கள் பழமையான கட்டிடத்தின் சுவர், இடிந்து விழுந்தது. இதில் இட்லி கடை நடத்தி வந்த பெண் உட்பட இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.