சேலம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் கமலா, இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஆதரவின்றி ஆட்சியர் அலுவலகம் அருகே சுற்றி திரிந்துள்ளார். தகவலறிந்த ஆட்சியர் ரோகினி நேரில் சென்று முதாட்டியிடம் நலம் விசாரித்தார். பின்னர் மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆட்சியர் ரோகினியின் செயலை பலரும் பாராட்டு வருகின்றனர்.