தமிழ்நாடு

சகோதரர்கள் இடையே தகராறு; அண்ணனை கொலை செய்த தம்பி கைது - இரணியல் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார். மணக்கரை பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர், மது அருந்தி விட்டு, தனது சகோதரர் அன்பையனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பையன், கம்பியால் நேசமணியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இரணியல் போலீசார், நேசமணியின் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அன்பையனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை