தமிழ்நாடு

சகோதரர்கள் இடையே தகராறு; அண்ணனை கொலை செய்த தம்பி கைது - இரணியல் போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே, அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார். மணக்கரை பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவர், மது அருந்தி விட்டு, தனது சகோதரர் அன்பையனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அன்பையன், கம்பியால் நேசமணியை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த இரணியல் போலீசார், நேசமணியின் உடலைக் கைப்பற்றி நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அன்பையனை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு