தகுதியில்லாத நடிகர்களுக்கு கோடிகள் தர தயாராக உள்ளனர் என்றும், இதன் காரணமாகவே திரைப்படங்கள் சரியாக அமையாமல் போகிறது என்றும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விஜயராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "எவனும் புத்தனில்லை" படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீடு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய செவ்லமணி இவ்வாறு தெரிவித்தார். மேலும், சினிமா துறை பாதிக்கப்படும்போது பாதுகாக்க வேண்டிய அரசே, சினிமா களவாடப்படுவதற்கு காரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.