தமிழ்நாடு

திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவனுக்கு டிப்தீரியா : நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி முகாம்

திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவனுக்கு உயிர்க்கொல்லி நோயான டிப்தீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு டிப்தீரியா இருப்பது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள, 15 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம பகுதியை சிறுவர், சிறுமிகளுக்கு, டிப்தீரியா தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்