தமிழ்நாடு

ஃபைன் கேட்டு மிரட்டியவரை விரட்ட வந்த அதிகாரிகள்.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த ஹோட்டல் ஓனர்..

தந்தி டிவி

பழனியில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போல் நடித்து பணம் கேட்டு மிரட்டிய நபரை கடைக்காரர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் குமார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போல் பேசி, பழனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்திய இவர், தான் கூறும் நம்பருக்கு 3 ஆயிரம் ரூபாய் ஜிபே செய்யும் படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில், ஹோட்டல் உரிமையாளர் சந்தேகமடைந்து, உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்த அதிகாரிகள், குமாரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில் பல கடைகளில் இதே போல் நபர் கைவரிசை காட்டி இருப்பது தெரியவர, அவரை பிடித்து போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு