திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இது தொடர்பான காட்சிகளை காண்போம்.... அணைப்பட்டியில் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சச குழாய் உடைந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தண்ணீர் சாலையில் சீறிப்பாய்கிறது... வைகை ஆற்றுப் பேரணையிலிருந்து நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கூட்டுக் குடிநீர் குழாயில் திடீர் விரிசல் ஏற்பட்டதால், தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.... இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.