தமிழ்நாடு

Dindigul | மாறி மாறி கொடூரமாய் மோதிக்கொண்ட இருதரப்பினர் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Dindigul | மாறி மாறி கொடூரமாய் மோதிக்கொண்ட இருதரப்பினர் - 3 பேருக்கு அரிவாள் வெட்டு

thanthitv

சந்தூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட‌ மோதலில் வழக்கறிஞர் உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட‌ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் முருகேசனுக்கு சொந்தமான கிணற்றை தூர் வாரும் பணியில் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜேந்திரன் என்பவர் மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் கிணற்றை தூர் வார எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் அந்த கும்பல் முருகேசனை அறிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்க வந்த முருகேசனின் உறவினர்களான ஒச்சமாள், கருப்பையா ஆகியோரை கத்தியால் குத்தி, கடப்பாறையால் தாக்கியுள்ளனர். மேலும் முருகேசனின் உறவினர் காரை அடித்து நொறுக்கி கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்த விவசாய நிலம் கலவர பூமியாக காட்சியளித்தது. இது குறித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TVK Vijay | Puducherry Election | நெருங்கும் புதுச்சேரி தேர்தல் | மீண்டும் இறங்கும் விஜய்

BREAKING || சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வாசிப்பு - உறுதி செய்த நீதிபதி

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் கொடூரம்.. என்ன தண்டனை..? தீர்ப்பு வாசிப்பு

"உங்களுக்கு கஷ்டமா இருக்கா? போட்டு வாங்காதீங்க.." - கூட்டணி தலைவர்களை வைத்தே ஈபிஎஸ் அதிரடி பிரஸ்மீட்

Breaking | Custodial Death | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. சற்று நிமிடங்களில் தீர்ப்பு