Dindigul | லஞ்சம் வாங்கி சிக்கிய எஸ்.ஐ தடயத்தை அழிக்க முயற்சி - பரபரப்பு
திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய சார்பு ஆய்வாளர் பிடிபட்டபோது, தடயத்தை அழிக்க கண்ணாடி டம்ளரை உடைத்து ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ கலையரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இந்நிலையில், கைரேகை தடயத்தை அழிக்க அவர் டம்ளரை உடைத்ததில் அவருக்கும் அவரை தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு முதலுதவி கொடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.