தமிழ்நாடு

திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை திட்டம் : பணியை விரைவுப்படுத்த அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை

திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிமுக எம்.பி. ஓ.ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், இத்திட்டத்திற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்து, அறிக்கை தாக்கல் செய்ததாக குறிப்பிட்டார். ஆனால், தற்போது எந்த விதமான முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை என்றார். புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்ட மக்கள், மற்றும் சபரிமலை செல்லும் யாத்திரீகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் எனவே தாமதமின்றி, திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..