தமிழ்நாடு

`பூசாரி மரண வழக்கு' - OPS தம்பி கோர்ட்டில் ஆஜர் | O.Raja

தந்தி டிவி

தேனி மாவட்டம், கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த நாகமுத்து என்பவர், கடந்த 2012-ஆம் ஆண்டு த*கொல செய்து கொண்டார். அவரை த*கொ*லக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலரும், ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே பாண்டி இறந்து விட்டதால், மீதமுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர், சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜராகினர். வழக்கில் இறுதிக் கட்ட வாதங்கள் முடிவடைந்தது அடுத்து, தீர்ப்புக்காக அக்டோபர் 14-ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்