தமிழ்நாடு

Dindigul Incident |பட்டாக்க*தியுடன் வந்து மளிகை கடையை சூறையாடிய இளைஞர் | பதறவைக்கும் சிசிடிவி காட்சி

thanthitv

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் அதே பகுதியில் அதிமுக வார்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி அஞ்சலை மளிகைக் கடை நடத்தி வருகிறார். சேடப்பட்டியை சேர்ந்த ஹவுஸ் பாண்டி என்பவருக்கும், தண்டபாணிக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், ஹவுஸ் பாண்டி மீது கொலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹவுஸ் பாண்டியின் கூட்டாளியான ஆதி என்பவர், அஞ்சலையின் மளிகைக் கடைக்கு சென்று மாமூல் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மாமூல் தர மறுத்ததால் பட்டாக் கத்தியால் கடையை அடித்து நொறுக்கி சூறையாடிய அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வேடசந்தூர் காவல் நிலையத்தில் தண்டபாணி மற்றும் அஞ்சலை புகார் அளித்துள்ளனர். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு