தமிழ்நாடு

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை - வெளியான முக்கிய தகவல்..

தந்தி டிவி

நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், நிதிச்சேவைகள் துறை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது.

யுபிஐ போன்ற புரட்சிகரமான பரிவர்த்தனை முறையால், கோடிக்கணக்கானவர்கள் உடனடியான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.

முந்தைய நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 2,071 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை 2023-24-ஆம் நிதியாண்டில் 18 ஆயிரத்து 737 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டின் 5 மாதங்களில் பரிவர்த்தனை அளவு 8 ஆயிரத்து 659 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரீஷியஸ் ஆகிய 7 நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனை தற்போது நடைமுறையில் உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்