சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, அரசு சார்பில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.