தமிழ்நாடு

பேசின் பிரிட்ஜ்- ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் வடிகால் தேவை - நெடுஞ்சாலைகள் துறை இயக்குநரிடம் தயாநிதி மாறன் எம்.பி., மனு

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார்.

தந்தி டிவி

வட சென்னை வால்டாக்ஸ் சாலையில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கக்கோரி, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதிமாறன் மனு அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலர் கார்த்திக்கை சந்தித்த அவர், ஈ.வே.ரா நெடுஞ்சாலை மற்றும் பேசின் பிரிட்ஜ்யை இணைக்கும் வால்டாக்ஸ் சாலையில், வடிகால் அமைக்க வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கால்வாயில், மழைநீர் வடிகால் செயலற்று உள்ளது என்றார். சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் வீடுகளில் புகுந்து, அப்பகுதியினர் அவதியுற்றதாக தெரிவித்தார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு