தமிழ்நாடு

மருத்துவர்கள் இல்லாமல் உடற்கூறு பரிசோதனை : தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவலம்

தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடல்கள், மருத்துவர் அல்லாத பணியாளர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை, மருத்துவர் அல்லாத பணியாளர்கள் சிலர் பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இறந்தவர் மற்றும் கொலை செய்யப்பட்டவரின் உடலை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு நடத்தினால் மட்டுமே, அதன் பிறகு தரப்படும் மருத்துவ அறிக்கை சரியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை தலையிட்டு உண்மை நிலையை அறியவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"