தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள பேக்கரி கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பல கடைகளில் அழுகிப்போன முட்டைகள், காலாவதியான மற்றும் கெட்டுப்போன உணவு பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பல இடங்களில் உணவு தயாரிக்கும் பகுதிகள் சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றம் வீசிய நிலையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்ததுடன் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.