தமிழ்நாடு

"தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை"

வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
வாரிசு உரிமை விவகாரத்தில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக கூறிய வழக்கில், நடிகர் தனுஷ் வரும் 13-ம் தேதி பதிலளிக்குமாறு மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதி, தனுஷ் தங்களின் மகன் என்று தாக்கல் செய்த மனுமீது கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், தமது பிறப்பு மற்றும் கல்வி குறித்து தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று குறிப்பிட்டு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சாமுண்டீஸ்வரிபிரபா, இதுகுறித்து நடிகர் தனுஷ் மற்றும் மதுரை மாநகர் கோ.புதூர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 13.ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு