நடிகர் தனுஷை, தனது மகன் என உரிமை கோரிய வழக்கில், அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனுஷ் போலியான ஆவணங்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.