தமிழ்நாடு

"உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுங்கள்" - காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி புகார்

உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் தாடி பாலாஜி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி
தன்னையும், தன் மனைவி நித்யாவையும் காவல் உதவி ஆய்வாளரான மனோஜ்குமார் திட்டமிட்டு பிரித்து வருவதாக நடிகர் தாடி பாலாஜி கடந்த ஒரு வருடத்திற்கு முன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்கு கடந்த 13ஆம் தேதி மனோஜ்குமார் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் ஆஜராகினர். அப்போது மனோஜ்குமார் தன்னுடைய உடல் செய்கையால் தன்னை மிரட்டியதாக தாடி பாலாஜி அப்போதே குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார். இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் தாடி பாலாஜி, மனோஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். காவல் ஆய்வாளர் குறித்த போதிய ஆதாரங்களை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி