தமிழ்நாடு

ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

ஊரடங்கையொட்டி, நியாய விலைகடைகளில் இலவசமாக கூடுதலாக அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் ரேசன் பொருட்களை கள்ளசந்தைகளில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, ரேசன் அரிசியை பதுக்கியும், கடத்தி சென்று விற்பவர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் கள்ளசந்தை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு துறை டிஜிபி பிரதீப் வி பிலீப் தெரிவித்துள்ளார். மேலும் , முககவசம், சானிடைசரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு