தமிழ்நாடு

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தேர்தல் டிஜிபி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடியும் வரை தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுடனும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்,

கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள மொத்த வாக்குப் பதிவு மையங்கள், பதற்றமான வாக்குச் சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"