தமிழ்நாடு

" 142 அடிக்கு கீழ் குறைக்க முடியாது" - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திட்டவட்டம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தந்தி டிவி

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு, கேரள அரசு விடுத்த கோரிக்கைக்கு, தமிழக அரசு பதில் அளித்துள்ளது. குமுளியில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்,

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அணை முழு பலமாக இருப்பதால், தற்போது, 13 மதகுகள் மூலம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டி விட்டதால் வருகிற 20 ம் தேதி, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்