ஓசூர் அந்திவாடி பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயில் இடிக்கப்பட்டது. முன்னதாக கோவிலை இடிக்க இந்து சமய அறநிலையத்துறையிடம்
முறையாக அனுமதி பெறப்பட்டது. இந்நிலையில், மத்திகிரி போலீசாரின் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Demolition of a 300-year-old Anjaneyar (Hanuman) templeமேலும், இடிக்கப்பட்ட கோவிலை மாற்று இடத்தில்
கட்ட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.