தமிழ்நாடு

தொடங்கியது வேலை... டெவலப் ஆகும் டெல்டா

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் வேளாண் பெரும் தொழில் வழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளது.

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவக்குவதை ஊக்குவிக்க, வேளாண் பெரும் தொழில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்டஅறிக்கையை, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறையின் கீழ் இயங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்கல் நிறுவனம் தயாரித்தது. இதனைத் தொடர்ந்து வேளாண் தொழில் வழித்தட பணிகளை, ஆயிரத்து௧௭௦ கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், வேளாண் பெரு தொழில் வழித்தடத்திற்கான திட்ட மேலாண்மை அலகை அமைக்கும் பணியை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தொடங்கியுள்ளது. திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருதல், தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ள உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை