தமிழ்நாடு

ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை...

காவிரியில், ஜூன் 12 -ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

நீரின்றி கல்லணை வறண்டு போய் உள்ளதால், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப்போன நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, தஞ்சை மாவட்டத்தின் பல இடங்களில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். 90 நாட்களுக்கு தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்துள்ள விவசாயிகள், மின்மோட்டார் நீரை வைத்து முழுமையாக விவசாயம் செய்ய முடியாது என தெரிவித்தனர். கிணற்று பாசனத்தால் மகசூல் குறைந்த அளவு தான் கிடைக்கும் என்றும், காவிரி நீர் வந்தால் மட்டுமே உரிய மகசூல் கிடைக்கும் என்றும், பயிரை காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். ஜூன் 12 தண்ணீர் திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை