Delivery boy death |முகவரி தெரியாமல் நின்ற டெலிவரி ஊழியர்..திடீரென மோதிய லாரியால் பிரிந்த உயிர் போரூரை சேர்ந்த ஆன்லைன் டெலிவரி ஊழியர் வேலாயுதம், பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி பகுதியில் உள்ள வீட்டிற்கு பொருட்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார். வீட்டின் முகவரி தெரியாததால் நின்று கொண்டிருந்த வேலாயுதம் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி வேகமாக மோதியது. இதில், வேலாயுதம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, விபத்திற்கு காரணமான தண்ணீர் லாரி ஓட்டுநர் அய்யாவு என்பவரை கைது செய்த போலீசார், தண்ணீர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.