தமிழ்நாடு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

தந்தி டிவி

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள் நீட்டிக்கக் கோரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் ஜாமின் நிறைவடைந்த பிறகு, அவருடைய நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்குமாறு அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை, வரும் ஜூன் 2-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்