விருதுநகர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய இளைஞர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு என்பவர் மகன் ராஜா செல்வம். இவர் பட்டுக்கோட்டையில் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜா செல்வம் பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு சாமி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். வழக்கம்போல் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கிய நிலையில் அவரை மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற போலீசார் ராஜா செல்வத்தின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.