தமிழ்நாடு

வெளிச்சத்துக்கு வந்த மருமகளின் கொடூர சதி... அப்பாவி மாமனாருக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய வீடியோ

தந்தி டிவி

வெளிச்சத்துக்கு வந்த மருமகளின் கொடூர சதி... அப்பாவி மாமனாருக்கு நேர்ந்த கொடுமை - சிக்கிய வீடியோ

மகாராஷ்டிராவின் நாக்பூரில் 300 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி மருமகளே கார் ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் கார் விபத்தில் 82 வயதான புருஷோத்தம் புட்டேவார் என்ற முதியவர் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மாமனாரின் 300 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரது மருமகள் அர்ச்சனா ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது. இதற்காக மருத்துவரான தனது கணவர் மணீஷ் புட்டேவாரிடம் கார் ஓட்டுனராக பணி புரிந்தவரை வைத்தே அர்ச்சனா இந்த சதி திட்டத்தை தீட்டியுள்ளார். சம்பவத்தன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவி சகுந்தலாவை பார்த்துவிட்டு திரும்பிய போது, புருஷோத்தம் புட்டேவாரை அவர்கள் கார் ஏற்றி கொலை செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்